இன்றைய நிலையில் தமிழக முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குபவர்கள் முஸ்லிம் பெயரைத் தன்னில் கொண்ட தமுமுக -வும் ஏகத்துவத்தைத் தன் பெயரில் கொண்ட ததஜவும் தான்.இந்த இரு அரசியல் அணிகளும் ஒன்றிணைந்தால் சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
இவர்கள் பிரிந்து நிற்பதற்காகச் சொல்லப்படும் காரணிகளில் முக்கியமானது
பணப்பிரச்சனை.
இவர்கள் இடையிலான ஒற்றுமை:
இரு அணிகளுமே முஸ்லிம்கள்.இனி இவர்கள் பிரிந்து நின்று அணி சேர்ந்துள்ளவர்களைக் குறித்துப் பார்ப்போம்:
முதலில் தமுமுக ஆதரவு தெரிவிக்கும் கருணாநிதி.
1. ஜெயலலிதா இறக்குமதி செய்த பாஜக-வை தமிழகத்தில் வளர்த்தி விட்டவர்.
2. முஸ்லிம்களுக்கு நெஞ்சில் இடம் தருவதாக அல்வா கொடுப்பதில் நீண்ட நெடிய சுமார் 40 வருட பாரம்பரிய அனுபவம் உள்ளவர்.
3. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவிகளை 10 வருடம் சிறையிலிட்டு 150 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களைச் சீரழித்தவர்.
4. அந்தக் குண்டு வெடிப்பிற்குக் காரணமான 19 முஸ்லிம்களின் படுகொலை சம்பவத்தை வெற்றிகரமாக பாசிச சங்க்பரிவாரக் கும்பலுடன் இணைந்து நடத்திய காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தவர்.
5. அயல் ராஜ்யங்களான இலங்கை மற்றும் மலேசியாவில் குடியுரிமைப் பெற்று அந்நாட்டவர்களாக வாழ்பவர்களுக்குப் பிரச்சனை என்றவுடன் தன் நிலை மறந்து கவிதையாகவும் உரைநடையாகவும் ஆற்றாமையை வெளிப்படுத்தியவர், இந்தியாவிற்கு உள்ளேயே இந்தியக் குடிமகன்களாக வாழும் குஜராத் முஸ்லிம்கள் 3000க்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாகப் படுகொலைச் செய்யப்பட்டச் சம்பவத்தைக் குறித்துக்கருத்துக் கேட்கப்பட்ட பொழுது, 'அது அம்மாநிலத்தின் உள் பிரச்சனை' எனக் கூறி நழுவியவர்.
(கருணாநிதி ஓர் பச்சை துரோகச் சந்தர்ப்பவாதி என்பதற்கு இதனை விட வேறு ஆதாரம் ஏதும் தேவையில்லை).இப்படிப்பட்ட அயோக்கியனுடன் தான் சகோதரர்களிடமிருந்துப் பிரிந்து தமுமுக கூட்டணி வைத்துள்ளது.
இனி எம்.ஜி.ஆர் வளர்த்த அண்ணா திராவிட கட்சியை சுருட்டி கக்கத்தில் வைத்துள்ள ஜெயலலிதா குறித்து:சட்டமன்றத்திலேயே தன்னை ஓர் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட இவளைக் குறித்துக் கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
எனினும்,
1. இறையில்லமான பாபர் மசூதியை இடிக்க ஆதரவு தெரிவித்த இந்தியாவிலேயே ஒரே மாநில முதலமைச்சர் மட்டுமன்றி தமிழகத்திலிருந்து பாபர் மசூதியை இடிக்கக் கரசேவக ரவுடிகளை அரசு செலவிலேயே அனுப்பியவள்.
2. வடக்கில் இரத்த அறுவடை செய்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான பாஜகவைத் தமிழகத்திற்கு முதன்முதலாக இறக்குமதி செய்த, அண்ணா திராவிடக் கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் பாப்பாத்தி!!!
3. 3000க்கு மேற்பட்ட முஸ்லிம்களை உயிரோடு அறுத்தும் எரித்தும் நரதாண்டவமாடியச் சம்பவத்திற்குப் பிறகு நரமாமிச உண்ணி மோடி தேர்தலில் வெற்றி பெற்ற உடன் அடக்கமுடியாத மகிழ்ச்சியில் நேரடியாகவே சென்று பூங்கொத்து வழங்கி (3000 முஸ்லிம்களைக் கொன்று குவித்து வெற்றி வாகை சூடியதற்கு) வாழ்த்துக் கூறிய தேசப்பற்று மிக்க தாரிகை!!!. (முஸ்லிம்களைக் கருவறுப்பதில் ஆனந்தமடையும்பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த இவள் முஸ்லிம்கள் என வரும் பொழுது தனது இனத்தோடு சேர்ந்துக் கொள்வாள் என்பதற்கு இதனைவிட வேறு பெரிய தெளிவு ஏதும் தேவையில்லை)
4. இந்தியா அடக்குமுறையில் இருந்த ஆங்கிலேயன் காலத்திலேயே இருந்த உரிமை சுதந்திரத்திற்குப் பின் துரோக ஆட்சியாளர்களால் வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட உரிமை - இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு எப்பொழுதுமே தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் எங்குமே கிடைக்கக் கூடாது என சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதற்கு எதிராக விஷயத்தைக் கொட்டி வருபவள்.
5. இன்னும் பல அடுக்கலாம். இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.இப்படிப் பட்ட மனம் நிறைய நஞ்சுடன் வலம் வரும் இந்தப் பார்ப்பன வெறிப்பிடித்தவளுடன் தான், இணைந்திருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படும் எனச் சகோதரர்களிடமிருந்துப் பிரிந்து வந்த ஏகத்துவத்தின் காவலர்களான ததஜ, 'ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு தருவேன்' என்ற வாக்குறுதியைப் பேணாத(மெரீனா மாநாட்டில் இவள் தந்த வாக்குறுதியும் பின்னர் அவ்வாறுதரவேயில்லை எனக் கூறியதையும் நினைவில் கொள்ளவும்) இந்த நயவஞ்சகியுடன் சமரசம் செய்துக் கொண்டு கூட்டணி வைத்துக் கொண்டது
(இவ்விடம் முஃமின் ஒரு பொந்தில் ஒரு முறையே கொட்டு கொள்வான் என்ற நபிமொழியையும் நாம் நினைவில் நிறுத்துவோம்.
மேலும் தமுமுகவுடன் இருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு இடையூறு வரும், பாப்பாத்தி ஜெயலலிதாவுடன் இருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்குப்பாதுகாப்பு கிடைக்குமோ - மத மாற்றத் தடைச் சட்டம் நினைவுக்கு வரவேண்டும்)
இனி இவர்கள் மத்தியில் உள்ள முக்கியமான ஓர் ஒற்றுமை
திராவிடக் காவலன் கருணாநிதி, அண்ணா திராவிட பாப்பாத்தி ஜெயலலிதா இந்த இரு நயவஞ்சகக் கில்லாடிகளுமே முஸ்லிம்கள் அல்ல - யதார்த்தப் படைப்பாளனுக்கு எதிரிகள்.உண்மையாக நினைத்துப் பார்த்தால் உடம்பு புல்லரிக்கவெ செய்கிறது - நமது சமுதாயக் காவலர்களாக அடையாளம் காட்டி வரும் ததஜ மற்றும் தமுமுக தலைவர்கள் தங்களுக்கிடையில் ஒன்றுமில்லா உலக விஷயங்களுக்காகப் பிரிந்து நின்றுக் கொண்டு, இந்த நயவஞ்சகக் கூட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அதற்கான நியாயங்களாகச் சப்பைக் கட்டுகளைக் கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து!ததஜ, தமுமுக தலைவர்களே திருந்துங்கள்! அல்லது நிச்சயம் வல்ல இறைவனால் திருத்தியமைக்கப்படுவீர்கள்!சமுதாயத் தலைவர்களே! செல்லுமிடமெல்லாம் கேள்வி, பதில் பகுதி வைத்து அதிலும் அரசியல் விளையாட்டு நடத்தும் உங்களிடம் இந்த எளியோனின் ஓர் சிறு கேள்வி:
இறைவனின் எதிரிகளுடன் கூட்டணி வைக்கவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் உங்களுக்குக் கிடைத்தக் காரணங்களில் ஒன்று கூடவா உங்கள் சகோதர இயக்கங்களுடன் ஒருங்கிணைந்துச் செல்வதற்கும் அவர்களுடன் ஓரிடத்தில் அமர்ந்துச் சமுதாயப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் குறித்து அலசுவதற்கும் கிடைக்கவில்லை?இதற்கான பதில் நீங்கள் சொல்லியே ஆக வேண்டும். இல்லையெனில் இக்கேள்வி உங்களை மறுமை வரை விரட்டிக் கொண்டே இருக்கும்.
தீர்வு:
1. தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய இந்த இரு அணிகளுமே தங்களுக்கிடையில் ஒரே கருத்துள்ள சில விஷயங்களிலாவது ஒன்றிணைந்துச் செயல்படலாம் என ஓர் குறைந்தப் பட்ச ஒப்பந்தம் செய்து கொள்வது.
2. எக்காரணம் கொண்டும் சகோதரர்கள் இழிவு படும் விதமாகப் பொது இடங்களில் அவர்களின் குறைகளைப் பேசுவதில்லை என உறுதி எடுத்துக் கொள்வது(ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்குப் பாதுகாவலனாவான். அவனின் பெருமைக்கு இழுக்கு ஏற்பட அவன் எவ்வகையிலும் காரணமாக இருக்க மாட்டான்)
3. தங்களுக்குள் ஏற்பட்ட குறைந்தப் பட்ச விஷயங்களில் உள்ள உடன்படிக்கையினை எடுத்துக் கொண்டு மற்றைய ஜாக், மனித நீதி பாசறை, ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக், ஜமாஅத்துல் உலமா என அனைத்து அமைப்புகளையும் ஒவ்வொன்றாக சமீபித்து அவ்விஷயங்களில் ஒருங்கிணைந்துச் செயல்பட வருமாறு அவர்களுக்கும் ஒற்றுமைக்கான அழைப்பு விடுத்தல்.தற்பொழுதைக்கு இவ்வளவு போதும்.
ஒரு சிறு ஆரம்பம் மட்டுமே நம்மிடமிருந்து வேண்டும்.அதாவது மனதார ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம். அதன் அடிப்படையிலான முன் முயற்சி. இதனை மட்டும் செய்ய ஆரம்பித்து விட்டால் பின்னர் உள்ள வழிகள் ஒவ்வொன்றையும் வல்ல இறைவன் அழகாக அமைத்துத் தந்து விடுவான் இன்ஷா அல்லாஹ்!நாம் ஒரு அடி நகர்ந்தால் இறைவன் இரு அடிகளும் நாம் நடந்தால் இறைவன் ஓடியும் நாம் ஓடினால் இறைவன் நமது கைகளாகவும் கால்களாவுமே மாறி விடுவான் என்பதை நாம் நினைவில் நிறுத்துவோம்.இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நிற்கும் இடத்திலிருந்து ஒரு அடி முன் எடுத்து வைப்பதை மட்டுமே.அதனை எடுத்து வைக்க முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுவதாக உரிமைகோரும் தமுமுகாவோ அல்லது ஏகத்துவத்தின் காவலர்களாகத் தங்களை அடையாளம் காட்டும் ததஜாவோ, யார் முதலில் முதல் அடியை எடுத்து வைக்கின்றீர்களோ அவர்களுக்கு இறைவனின் முழு அருளும் இரு உலகிலும் காத்திருக்கின்றது என்பதை மறவாதீர்கள்.
நன்றி : இறை நேசன்
Sunday, February 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment